சிங்கப்பூரில் உள்ள பொதுக் கழிவறைகள் 2016ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் இப்போது மேலும் அசுத்தமாக உள்ளது என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) ஜனவரி 10 முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்குள்ள உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகளில் உள்ள 1,000க்கு மேற்பட்ட கழிவறைகளில் இந்த ஆய்வு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது.
இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று பொது மக்களிடையே பொதுச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் குறைந்துவிட்டன. மற்றொன்று முறையாக பராமரிக்கப்படாத மற்றும் பழுதுபார்க்கப்படாத கழிவறை வசதிகள் என்று எஸ்எம்யு தெரிவித்தது.
“பொதுச் சுகாதாரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; காப்பிக் கடைகள், உணவங்காடி நிலையங்களின் நடத்துநர்களுக்கும் பொதுச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் போதிக்க வேண்டும்,” என்று எஸ்எம்யு வின் திட்ட ஒருங்கிணைப்பாளரும் புள்ளிவிவரத்துறை மூத்த விரிவுரையாளருமான ரேசி சிங் கூறினார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online