சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் 14 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களால் பயணிகளுக்கு கிருமிப் பரவல் நிகழவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 18) தெரிவித்தது.

பொதுப் போக்குவரத்து மூலம் கிருமிப் பரவல் நிகழ்ந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது.

இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் முதல் கட்டமாகத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் காலை உச்ச நேரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.

இன்று முதல் இரண்டாம் கட்ட தளர்வுகள் நடப்புக்கு வந்துள்ள நிலையில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப்போக்குவரத்துப் பயணத்தின்போது ஏற்படும் தொடர்புகள் மிகக் குறுகிய காலத்தவை என்றும் அந்தக் காலகட்டத்தில் கொரோனா கிருமிப் பரவல் நிகழும் அபாயம் குறைவு என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பயணிகள் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து மேற்கொண்ள்வது அவசியம் எனத் தெரிவித்த அமைச்சு, ‘டிரேஷ் டுகெதர்’ செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் துப்புரவு பணிகளை மேம்படுத்துவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!