சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தனது லாட்டரி குலுக்கல்கள் இம்மாதம் 22ஆம் தேதி திங்கட் கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளது.
மேலும் அதன் கிளைகள் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற லாட்டரி சில்லறை விற்பனைக் கடைகளும் அந்த நாளில் படிப்படியாகத் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கும்.
சிங்கப்பூர் பூல்ஸ் ‘லைஃப்வையர்’ இடங்களும் ‘ஆஃப் கோர்ஸ்’ பந்தயப் பிடிப்பு நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
டோட்டோ லாட்டரி குலுக்கல் இம்மாதம் 25ஆம் தேதியும் நான்கிலக்க (4D) குலுக்கல் இம்மாதம் 24ஆம் தேதியும் தொடங்கும் என்றும் சிங்கப்பூர் சுவீப் ஆகஸ்ட் மாதக் குலுக்கல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் சிங்கப்பூர் பூல்ஸ் கூறியது. மேல் விவரங்களுக்கு சிங்கப்பூர் பூல்ஸ் இணையத் தளத்தை நாடலாம்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online