சிங்கப்பூரில் மேலும் 226 பேருக்கு கொவிட்-19; ஒருவர் சிறையில் இருக்கும் வெளிநாட்டவர்

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 3) நண்பகல் நிலவரப்படி புதிதாக 226 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,051 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 1 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது என்றும் அவர் கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளுக்கு முன்பாகவே, குறுகியகால விசாவில் சிங்கப்பூருக்கு வந்து தற்போது சிறையில் இருப்பவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவர் சிறையில் அனுமதிக்கப்பட்ட ஜூலை 30 முதல், சிறையில் இருக்கும் மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் புதிய கைதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமித்தொற்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!