சாங்கி கடற்கரைப் பூங்காவுக்கு அருகில் கடலிலிருந்து 14 வயது சிறுவனின் சடலம் மீட்பு

சாங்கி கடற்கரைப் பூங்காவுக்கு அருகில் கடலிலிருந்து 14 வயதுச் சிறுவனின் சடலத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இன்று மீட்டனர்.

கடல் நீரிலிருந்து மீட்க உதவி கோரி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது அங்கு கரையில் ஒருவரைக் கண்டனர். ஆனால், இரண்டாம் நபர் இருந்ததற்கான அறிகுறி ஏதுமில்லை.

அதனையடுத்து, முதல் நபர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்பது தெரியவில்லை.

பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த முக்குளிப்பாளர்கள் நீருக்கடியில் இரண்டாம் நபரைத் தேடும் பணியில் இறங்கினர்.

கரையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் சடலம் ஒன்றை அவர்கள் மீட்டனர்.

அவர் இறந்துபோனதாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!