13 கட்டுமானத் தளங்களில் கொவிட்-19 பரவலால் பணிகள் நிறுத்தம்

சுங்கை தெங்கா லாட்ஜ் ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியிருப்பதையடுத்து, அந்த விடுதியைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரியும் 20 கட்டுமானத் தளங்களில் 13ல் பணிகளை நிறுத்த கட்டட, கட்டுமான ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கட்டுமானத் தளங்களில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 பரவல் உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால், அவற்றைச் சரிசெய்து, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக நிறுவனங்களுக்கு பணி நிறுத்த ஆணை வழங்கப்பட்டிருப்பதாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

அந்த 20 கட்டுமானத் தளங்களும் வர்த்தக, உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை உள்ளடக்கியவை என்றது கட்டட, கட்டுமான ஆணையம்.

இம்மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஊழியர் தங்கும் விடுதிகளும் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, கடந்த சனிக்கிழமை சுங்கை தெங்கா லாட்ஜ் ஊழியர் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் காக்கி புக்கிட்டில் இருக்கும் மற்றொரு தங்கும் விடுதியிலும் புதிய கிருமித்தொற்று குழுமம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!