சிலாட் அவென்யூவில் உள்ள லீ ஆ மூய் முதியோர் இல்லவாசிகள், ஊழியர்கள் என மொத்தம் 90 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த இல்லத்தின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த இல்லத்தில் முன்பு பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிலிப்பீன்சில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இல்லவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த விடுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

