நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்
கொவிட்-19 உலகை வெல்லும் நிறுவனங்களான சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்றவற்றின் நாற்பது ஆண்டுகால முன்னேற்றத்தை நிறுத்தியுள்ளது. ஆனால் அவை மீண்டும் பிரகாசிக்குமா என்று ஐயப்பட வேண்டாம், அச்சப்பட வேண்டாம் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொற்றுநோய் என்பது, இந்த நாடு பெற்றிருப்பதையும் அதன் தனித்தன்மையையும் போற்றிப் பாதுகாக்க புதிய தலைமுறை சிங்கப்பூரர்களுக்கு உதவும் ஓர் அனுபவமாகும் என்று அதிபரின் உரை மீதான விவாதத்தில் நேற்று இணைந்தபோது பிரதமர் லீ கூறினார்.