கொவிட்-19 பரிசோதனையைக் கொடுக்கப்பட்ட தேதிக்குள் செய்துகொள்ளாத காரணத்தால் கிட்டத்தட்ட 13,000 ஊழியர்களால் வேலைக்குத் திரும்ப முடியவில்லை.
ஊழியர்களின் 'எக்செஸ்கோட்' (AccessCode) சிவப்பு நிறத்தில் இருக்கும்.
பரிசோதனைக்குப் பின்னரே பச்சை நிறத்திற்கு மாறி வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஊழியர்களை இம்மாதம் 5ஆம் தேதிக்குள் பரிசோதனைக்கு அனுப்ப முன்பதிவு செய்திடுமாறு மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், பொருளியல் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை முதலாளிகளுக்கு நினைவுறுத்தியிருந்தன.

