ஈசூன் வட்டாரவாசிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த திட்டம்

நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக் கூடம், புதிய பொலிவுடன் உணவங்காடி நிலையம் சமூக மன்றம் என ஈசூன் வாசிகளுக்காக பலதரப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் காத்திருக்கிறது.

‘சோங் பாங் சிட்டி’யில் அமையவுள்ள இந்த 0.9 ஹெக்டர் பரப்பளவு திட்டம், 2027ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2022ன் இரண்டாம் பாதியில் தொடங்கவுள்ளன.

பல மாடிகளுடைய இத்திட்டத்தின் பெயர் ‘ச்சில்@சோங் பாங்’ (Chill@Chong Pang) என தற்போது முடிவாகியுள்ளது.

இப்புதிய திட்டம் ஈசூன் வட்டாரவாசிகள் மற்றும் நாட்டின் வடக்கு பகுதியில் வசிப்போரின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திடும் என்று சட்ட, உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.சண்முகம் இன்று மெய்நிகர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சோங் பாங் ஈரச்சந்தை மற்றும் உணவு நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள், இந்த புதிய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்படி இடம் மாறுவர் என்று சிங்கப்பூர் நில ஆணையம், மக்கள் கழகம், தேசிய சுற்றுப்புற அமைப்பு, ஸ்போர்ட் சிங்கப்பூர் ஆகியவற்றின் கூட்டறிக்கை தெரிவித்தது.

1984ஆம் ஆண்டில் கட்டப்பட்டு பின் 2003ல் மேம்படுத்தப்பட்ட உணவு நிலையத்தின் இடத்தில் சமூக கடைத்தொகுதி ஒன்று 2028ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!