சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 14) அறிவிக்கப்பட்ட 48 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி, இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போர், இருவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர்கள். இவர்களில் நால்வர் இந்தியாவிலிருந்தும் ஒருவர் அமெரிக்காவிலிருந்தும் சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சமூக அளவில் நேற்று யாருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 43 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். அவர்களில் 29 பேருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பு இருந்தது. கிருமிப் பரவலைத் தடுக்க அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.
தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனை நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எஞ்சிய 14 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
எண் 58 பெஞ்சுரு பிளேசில் இருக்கும் ஜூரோங் பெஞ்சுரு ஊழியர் தங்கும் விடுதி 1, எண் 36ல் இருக்கும் பெஞ்சுரு பிளேசில் உள்ள ஜூரோங் பெஞ்சுரு ஊழியர் தங்கும் விடுதி 2 ஆகிய இரண்டிலும் புதிய கிருமித்தொற்று குழுமங்கள் 2 நேற்று அறிவிக்கப்பட்டன.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 1 ஆக குறைந்துள்ளது.அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.