பிளாசா சிங்கப்பூரா, விவோசிட்டி, ஜங்ஷன் 8, ஹவ்காங் மால் போன்ற இடங்களுக்கு, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்) கடந்த மாதம் 25 முதல் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 14) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஈக்கியா தெம்பனிஸ், சாங்கி விமான நிலைய முனையம் 1ல் இருக்கும் பர்கர் கிங் ஆகிய கடைகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.