சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 23) நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,639 ஆகியுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில், உள்ளூர் சமூகத்தில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.