இந்தியாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் புதிய சம்பவங்கள் இல்லை

சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 22) அறிவிக்கப்பட்ட 21 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாது ஒருவர் கடந்த 10ஆம் தேதி இந்தியாவிலிருந்து திரும்பியவர். அவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

நேற்று உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் கிருமித்தொற்று அறிவிக்கப்படவில்லை.

எஞ்சிய 20 கிருமித்தொற்று சம்பவங்கள் விடுதிகளில் தங்கியிருப்போர் தொடர்பிலானது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த இடங்களின் பட்டியலில் புதிதாக இடங்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை.

உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1 ஆக இருக்கிறது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 31.7 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 974,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!