இந்தியா, இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய 9 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 29) 27 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

அவர்களில் ஒருவர் உள்ளூர் சமூகத்தில் வசிக்கும் மலேசிய ஊழியர். அவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

ஒரு சிங்கப்பூரர், ஒரு வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர் என இருவர் இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

நிரந்தரவாசிகள் ஐவர், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஒருவர் ஆகியோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

மற்றவர்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 34 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!