கொவிட்-19 சூழலில் விமானப் பயண அனுபவத்தைப் பெற எஸ்ஐஏ நிறுவனத்தின் புதிய நடவடிக்கைகள்: கட்டண விவரம் அறிவிப்பு

கொரோனா தொற்று சூழல் காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை பெரிதும் நசிவைச் சந்தித்துள்ள வேளையில், உள்ளூர்வாசிகளுக்கு வித்தியாசமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் விமானப் பயணச் சூழலில் உணவு உட்கொள்வது உட்பட 3 நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆகப் பெரிய ஏர்பஸ் A-380 விமானத்தில் எகானமி பிரிவு அறையில் மூன்று மணி நேரம் செலவழித்து மதிய உணவு உட்கொள்ள $50 செலவாகும்.

இன்னும் மேம்பட்ட அனுபவம் தேவைப்பட்டால், முதல் வகுப்பு சிறப்பு அறைகளில் மதிய உணவு உட்கொள்ள $600 கட்டணம்.

இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் பயிற்சி வளாகத்தைச் சுற்றிப்பார்க்க 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு $15, பெரியவர்களுக்கு $30 கட்டணம்.விமான பாவனை அனுபவம் பெற விரும்பினால் மூவருக்கு $500 என்ற விதத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு கொண்டுவந்து கொடுக்கும் சேவையும் உண்டு. வர்த்தகப் பிரிவு உணவுக்கு $288. முதல் வகுப்பு உணவுக்கு $448. பிரபல சமையல் கலை வல்லுநர்களைக் கொண்டு இந்த உணவுப் பட்டியல், உணவு தயாரிக்கப்படுவதாக மக்கான்சூத்ரா நிறுவனத்தின் நிறுவனர் கே.எஃப். சீத்தோ குறிப்பிட்டார்.

இந்த விலைப் பட்டியலில் பொருள், சேவை வரி சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!