டாக்சி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாதசாரிகள்; இளம்பெண் மருத்துவமனையில்

பாய லேபார் ரோடு, கேலாங் ரோடு சந்திப்பில் நேற்று பிற்பகல் வேளையில், சாலையைக் கடந்து சென்ற 17 வயது பெண், 24 வயது ஆடவர் ஆகிய பாதசாரிகள் மீது டாக்சி மோதியது.

பாதசாரிகள் இருவரும் அவர்களது உடைமைகளுடன் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த விபத்தில் சிக்கிய அந்தப் பெண் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தின் தொடர்பில் எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் சில்வர்கேப் டாக்சி ஒன்று, சாலையைக் கடந்துகொண்டிருந்த போது மோதியதைக் காட்டியது. அப்போது போக்குவரத்து சைகையில் சிவப்பு நிற மனிதன் இருந்ததைக் காண முடிந்தது.

சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 3.23 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!