சிங்கப்பூரில் மின்னணுவியல் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி; 1,900 வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு

கொரோனா கிருமித்தொற்று பரவல் இருந்தபோதும் சிங்கப்பூரில் மின்னணுவியல் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்தத் துறையில் சுமார் 1,900 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு இன்று (அக்டோபர் 19) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அவற்றில் பெரும்பாலானவை, ‘பிஎம்இடி’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான தொழில்நுட்பப் பணிகள்.

இந்தத் துறையில் உற்பத்திப் பொறியாளர்களுக்கான ஊதியம் $1,800 முதல் $3,225 வரையிலானது. பொதுவாக மின்னணுவியல், இயந்திரவியல் துறைப் பொறியாளர்களின் மாத சம்பளம் $4,500 முதல் $6,000 வரையிலானது.

விற்பனை, சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் போன்ற தொழில்நுட்பத் துறை சாராத பணிகளுக்கான மாத சம்பளம் $2,800 முதல் $8,500 வரையிலானது.

இவற்றைத் தவிர, நிறுவனங்களின் ஏற்பாட்டில் 850 பயிற்சிகளும் 150 பயிற்சி வேலைகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!