காருக்குள் வெடிபொருள் உள்ளது எனக் கூறியவர் மீது குற்றச்சாட்டு

பாய லேபார் ஆகாயப் படைப் பயிற்சி முகாமுக்கு அருகில் உள்ள மருத்துவ நிலையத்துக்கு காரை ஓட்டிச் சென்று தமது காருக்குள் வெடிபொருள் இருப்பதாகக் கூறியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று ஓல்டு ஏர்போர்ட் சாலையில் உள்ள சிங்கப்பூர் ஏரோமெடிக்கல் நிலையத்துக்கு கார் ஓட்டிச் சென்ற ஸாயித் ஹஷிம் சிராஜ், அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தமது காருக்குள் வெடிபொருள் இருப்பதாகக் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ் சிங்கப்பூரரான 30 வயது ஸாயித் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவரது காருக்குள் வெடிபொருள் இருந்ததா என்பது குறித்தும் ஸாயித்தின் இந்தச் செயலுக்காக காரணம் குறித்தும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

மனநலப் பரிசோதனைக்காக ஸாயித் மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!