சுற்றுச்சூழல் சேவை துறையில் 350க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்

சுற்றுச்சூழல் சேவை துறையில் 350க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்

1 mins read
38796215-19f4-4e12-9a65-7b79aeae4fdf
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுற்­றுச்­சூ­ழல் சேவைத் துறை­யில் வேலை­வாய்ப்­பு­களை வழங்­கும் வேலைக் கண்­காட்சி ஒன்று ஹொங் கா நார்த் சமூக மன்­றத்­தில் நேற்று தொடங்­கி­யது.

நாளை வரை நடை­பெ­றும் இந்­தக் கண்­காட்­சி­யில் ஏறத்­தாழ 21 நிறு­வ­னங்­களில் 350க்கும் அதி­க­மான வேலை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இவற்­றில் 20 விழுக்­காடு வேலை­கள் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் (பிஎம்­இடி) பிரி­வி­ன­ருக்­கா­னவை.

இந்த வேலைக் கண்­காட்­சி­யில் கலந்­து­கொண்டு நேற்று பேசிய நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர், "கொவிட்-19 சூழ­லில் பல­ருக்­கும் வேலை நில­வ­ரம் குறித்து கவலை அடைந்­துள்­ள­னர். ஆனால், வளர்ச்சி கண்­டு­வ­ரும் துறை­க­ளாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள துறை­களில் சுற்­றுச்­சூ­ழல் சேவைத் துறை­யும் ஒன்று," என்று கூறி­னார்.

இந்த வேலைக் கண்­காட்­சி­யில் பங்­கேற்­கும் பல நிறு­வ­னங்­கள், கூடு­த­லான ஊழி­யர்­க­ளைப் பணி­ அமர்த்தி தங்­க­ளது செயல்­பா­டு­களை விரி­வு­ப­டுத்த இருப்­ப­தாக டாக்­டர் கோர் குறிப்­பிட்­டார்.

ஊழி­ய­ரணி சிங்­கப்­பூர் அமைப்பு வழங்­கும் கழிவு மேலாண்மை நிபு­ணர்­க­ளுக்­கான தொழில்­முறை உரு­மாற்­றத் திட்­டத்­தின் மூலம் பணி­யி­டைக்­கால ஊழி­யர்­கள் தங்­க­ளது திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­லாம்.

குறிப்புச் சொற்கள்
வேலைசிங்கப்பூர்சுற்றுச்சூழல்