குடும்ப வன்முறைக்கு எதிராக அதிகரிக்கும் விழிப்புணர்வு

குடும்ப வன்­முறை சம்­ப­வங்­கள் பற்றி இன்­னும் அதி­க­மான மக்­கள் புகார் கொடுத்து வரும் வேளை­யில், அர­சாங்­க­மும் குடும்ப வன்­முறை தொடர்­பான விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தும் முயற்­சியை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குடும்ப வன்­முறை என்­றால் என்ன என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்­ள­வும், தங்­க­ளி­டம் வரு­வோர் குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­களா என்­பதை கண்­டு­பி­டிக்­கும் உத்­தி­களை மருந்­தக ஊழி­யர்­க­ளுக்கு சொல்­லிக் கொடுக்­கும் பயிற்­சி­களும் அளிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

நோய் முறி­ய­டிப்­புக் காலத்­துக்­குப் பிறகு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பெரி­ய­வர்­கள் மற்­றும் சிறார் பாது­காப்­புச் சேவை­கள் பிரி­வுக்கு குடும்ப வன்­முறை தொடர்­பி­லான விசா­ரிப்­பு­கள் மாதத்­துக்கு சரா­ச­ரி­யாக 25% கூடி­யுள்­ளது.

ஏப்­ரல் முதல் மே மாதம் வரை­யி­லான விசா­ரிப்­பு­க­ளைக் காட்­டி­லும் ஜூன் மாதத்­துக்­கும் செப்­டம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் கிடைக்­கப்­பெற்ற விசா­ரிப்­பு­கள் அதி­கம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு மற்­றும் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் தெரி­வித்­தார்.

நேற்று நடை­பெற்ற தேசிய குடும்ப வன்­முறை கட்­ட­மைப்பு தொடர்­பான மாநாட்­டில் பேசிய திரு­வாட்டி சுன், குடும்ப வன்­முறை பற்றி புகார் கொடுப்­ப­தில் பொது­மக்­கள் இப்­போது அதிக விழிப்­பு­டன் இருக்­கி­றார்­கள் என்­றும் இவ்­வாண்டு ஜன­வரி முதல் செப்­டம்­பர் வரை ஒரு மாதத்­துக்கு சரா­ச­ரி­யாக 118 சம்­ப­வங்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன என்­றார்.

மேலும் தமது அமைச்சு, ‘யூனிட்டி’ மருந்­த­கங்­க­ளு­டன் இணைந்து குடும்ப வன்­முறை தொடர்­பில் அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றி­யும் பயிற்­சி­யை­யும் வழங்­கு­கிறது என்று கூறிய அமைச்­சர், என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­தின் கீழ் இயங்­கும் அந்த மருந்­த­கத்­தின் 46 ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிக்­கப்­படும் என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் 60 ‘யூனிட்டி’ மருந்­த­க கிளைகள் செயல்­ப­டு­கின்­றன. இன்று தொடங்­கும் அந்­தப் பயிற்­சி­யில் அந்த மருந்­த­கத்­தின் ஊழி­யர்­க­ளுக்கு குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அடை­யா­ளம் காணும் முறை கற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.

“இது­போன்ற சமூக கண்­டு­பிடிப்பு முயற்­சி­கள் குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­க­ளு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­கொண்டு, அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் கூடு­தல் உத­வி­களை வழங்க உறு­து­ணை­யாக இருக்­கும்.

“‘யூனிட்டி’ மருந்­த­கங்­க­ளைத் தவிர, முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம், சிங்­கப்­பூ­ரில் உள்ள பிரஸ்­பித்­தீ­ரி­யன் தேவா­லா­யம் ஆகி­ய­வற்­று­ட­னும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு இணைந்து குடும்ப வன்­முறை தொடர்­பான விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளன.

“கொவிட்-19 நமது வேலை­யைப் பாதித்­தி­ருப்­பது தொடர்­பில் அதி­கம் பேசுப்­ப­டு­வது போல, இந்த கொள்­ளை­நோய் பர­வ­லுக்­குப் பிற­கும் நீடிக்­கக்­கூ­டிய குடும்ப வன்­முறை விவ­கா­ரத்­தி­லும் நாம் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும்,” என்­றும் திரு­வாட்டி சுன் வலி­யு­றுத்­தி­னார்.

சமூக அமைப்­பு­கள் மட்­டு­மல்­லா­மல் வர்த்­த­கங்­க­ளு­ட­னும் அமைச்சு பணியாற்றி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!