நியமன நாடாளுமன்ற உறுப்பினர் (என்எம்பி) பதவிக்கு இதுவரை எட்டு வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
அவர்களில் இருவர் சமூக தொழில்முனைவர் ஆந்தியா ஓங்கும் சிங்கப்பூர் சீன பல்லிய இசைக்குழுவின் நிர்வாக இயக்கு நர் டெரன்ஸ் ஹோவும் இரண்டாம் தவணைக் காலத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
'இஞ்சினியரிங் கூட்' எனும் லாபநோக்கமற்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு ஜோஹான் அனுவார், சமூக கலைஞர் திரு டெரன்ஸ் டான், மேடைக்கலைஞர் நபிலா சையது, நடிகையும் நிகழ்ச்சி படைப்பாளருமான ஆட்ரி லிம், என்டியுசி துணைத் தலைவர் அப்துல் சமத் அப்துல் வஹாப், ஆய்வு அறிவியலாளர் ஆண்டி ஆங் ஆகியோரே அந்த எட்டு பேர்.
நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தலைமையிலான நாடாளுமன்ற தேர்வுக் குழு விண்ணப்பங்களை ஆராய்ந்து, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, பின்னர் தேர்வு பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து பேசுவார்கள். பின்னர் இறுதிப் பட்டியல் அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.


