சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்

இரு வெளிநாட்டுப் பெண்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு உதவி செய்த குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரி ஒருவர் அவர்களிடமிருந்து பாலியல் சேவைகளையும் கையூட்டையும் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது இன்று (நவம்பர் 24) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

டியோ ஹுவி பெங் என்ற அந்த 47 வயது அதிகாரியுடன் சீன நாட்டவர்களான 37 வயது லியாங் சிங்லான், 32 வயது செங் வென்ஹுவான் ஆகிய இரு பெண்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

டியோ மீது 12 குற்றச்சாட்டுகளும் லியாங், செங் மீது முறையே ஒன்பது, 18 குற்றச்சாட்டுகளும் பாய்ந்தன.

தங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை பெற்றுத் தந்தால் டியோவுக்குப் பாலியல் சேவைகள் வழங்குவதாக லியாங்கும் செங்கும் அவரிடம் கூறினர்.

2018 முதல் கடந்த ஆண்டு வரை லியாங், டியோவுக்கு பாலியல் சேவைகளையும் $2,100 ரொக்கமும், 188.88 யுவான் ($39) அடங்கிய ரொக்க அன்பளிப்பு பொட்டலத்தையும் 7000 யுவான் மதிப்புள்ள கடனையும் வழங்கினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

செங், கடந்த ஆண்டு ஜூலையில் வெவ்வேறு சமயங்களில் டியோவுக்கு பாலியல் சேவைகளும் $1,500 ரொக்கமும் அளித்தார் என்று கூறப்பட்டது.

டியோ, செங், லியாங் ஆகியோர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாடப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!