சிங்கப்பூரில் பணிப்பெண்களுக்கு 5 மடங்கு வட்டியில் கடன் கொடுத்த ஆடவருக்குச் சிறை

குறைந்தது 19 பிலிப்பீன்ஸ் பணிப்பெண்களுக்குச் சட்ட விரோதமாக மாதம் 20% வட்டிக்கு மொத்தம் $8,400 கடன் வழங்கிய ஆடவருக்கு ஈராண்டுகளும் ஆறு வாரங்களும் சிறைத்தண்டனையும் $240,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

கடன்கொடுப்போர் சட்டத்தின்கீழ் அதிகபட்சம் 4% மட்டுமே வட்டி வசூலிக்கப்பட வேண்டும்.

சிங்கப்பூரில் உரிமம் பெறாமல் கடன் கொடுப்பது குற்றம் எனத் தெரிந்திருந்தும் அத்தொழிலில் ஈடுபட்ட டா பூன் டெக், 61, அதன்மூலம் மாதந்தோறும் $1,500 வரை வருமானம் ஈட்டி வந்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவர் இழிசொற்களால் பழித்துரைத்ததாகவும் கூறப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த முடியாவிடில் அவர் கூடுதலாக 16 வாரங்களைச் சிறையில் கழிக்க வேண்டும்.

வட்டித் தொழிலில் டானுக்கு உதவிய அவருடைய காதலியும் பிலிப்பீன்ஸ் பணிப்பெண்ணுமான ஷிர்லி கேன்சினோ யூஸ்டகியோவிற்கு ஏற்கெனவே எட்டு வாரச் சிறையும் $60,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் தனது சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!