கொவிட்-19 நெருக்கடிநிலையால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் கட்டாயம் பல சிங்கப்பூரர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்தச் சூழ்நிலை நமது சமூகத்தை மேலும் பலப்படுத்திஉள்ளதாக பொதுச் சேவை
செயல்திறன் மதிப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் பலர் ஒன்றிணைந்து செயல்படுவதை அது சுட்டியது. நெருக்கடிநிலையிலும் சமூக உணர்வு மிளிர்கிறது என்று அது கூறியது.
சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு முதன்முதலாக கடந்த ஜனவரி மாதத்தில் தலைதூக்கியபோது தனிநபர்களும் வர்த்தகர்களும்
அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டோர், பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
“சிங்கப்பூரர்களிடையே இருக்கும் வலிமைமிக்க சமூக உணர்வை இது காட்டுகிறது. பிறர் நலனில் சிங்கப்பூரர்கள் அக்கறை கொள்கின்றனர். ஒன்றிணைந்து செயல்
படுவதன் மூலம் நெருக்கடி
நிலையை முறியடித்து உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு அளிக்கலாம் என்பதை இது நிரூபித்துள்ளது,” என்று பொதுச் சேவைத் தலைவர் லியோ யிப் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் பொதுச் சேவை செயல்திறன் மதிப்பாய்வு அறிக்கை, நாட்டின் நலனுக்காக சிங்கப்பூரர்கள் பல்வேறு துறைகளில் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை ஆராய்ந்து முடிவுகளை வெளியிடும்.
இவ்வாண்டு வெளியிடப்பட்ட மதிப்பாய்வு அறிக்கை பல முக்கிய துறைகளில் சிங்கப்பூரர்களின் செயல்பாடுகளை மேற்கோள்காட்டி உள்ளது. அவற்றில் கொவிட்-19 நெருக்கடிநிலையை சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் விதம் முக்கிய இடம்பிடித்துள்ளது. நெருக்கடி
நிலையைச் சமாளிக்க தொண்
டூழியர்கள், நன்கொடை ஆகியவற்றுக்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பலர் தாங்களாகவே உதவித் திட்டங்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்
பட்டதாக சந்தேகிக்கப்பட்டோரை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முன்வந்த 500க்கும் மேற்பட்ட டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் உதாரணமாகக் காட்டப்பட்டனர்.