ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் இணைப்புத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு முதல் சிவில் குத்தகை கிடைத்துள்ளது.
அந்த $932.8 மில்லியன் குத்தகையின்கீழ் பென்டா-ஓஷன் கட்டுமான நிறுவனம், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இணைப்பின் சில பகுதிகளில் பணிகளைத் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இந்த நிறுவனம் தற்போது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள பிரைட் ஹில் மற்றும் ஆர்ச்சர்ட் நிலையங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜோகூர் பாரு- சிங்கப்பூர் ரயில் இணைப்புத் திட்டத்தில் சிங்கப்பூரின் நிலையம் உட்லண்ட்ஸ் நார்த்தில் அமைந்திருக்கும்.
குத்தகையின்கீழ் இந்த நிலையத்துடன் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகள் ஒரே இடத்தில் இயங்குவதற்கான கட்டடமும்
கட்டப்படும். இணைப்புத் திட்டத்துக்கான இரண்டாவது குத்தகை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும்.
2026ஆம் ஆண்டுக்குள் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் இணைப்புத் திட்டம் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்துக்கு 10,000 பேர் வரை பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் நிலையம் ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகாரில் அமைந்திருக்கும்.
இந்த இணைப்புத் திட்டத்தின் மூலம் இரு நிலையங்களுக்கும் இடையிலான பயண நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே.
நான்கு கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் இணைப்புப் பாதையை கட்டு வதற்கான செலவில் 39 விழுக்காட்டை மலேசியா ஏற்கும் என்றும் மீதமுள்ள தொகையை சிங்கப்பூர் ஏற்கும் என்பதில் இருநாடுகளின் அரசாங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.