அதிவிரைவு ரயில்: பிரதமர் லீ, முகைதீன் கலந்துரையாடல்

கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் அதி­விரைவு ரயில் திட்­டம் (எச்­எஸ்­ஆர்) தொடர்பாக பிர­த­மர் லீ சியன் லூங்­கும் மலே­சியப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் காணொளி மூலம் நேற்று கலந்­து­ரை­யாடி­னர்.

அதிவிரைவு ரயில் சேவைத் திட்­டம் தொடர்­பில் பேச்­சு­வார்த்­தை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டி­ருப்­பது குறித்து அவர்கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

அதே நேரத்­தில் இந்­தத் திட்­டத்­தில் மலே­சியா மற்­றும் சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பா­டு­ பற்றி அவர்­கள் புரிந்து­கொண்­ட­னர்.

இந்த இரு­த­ரப்பு ரயில் திட்­டம் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­படு­வ­தற்­கான காலக்­கெடு (டிசம்­பர் 31) நெருங்­கும் வேளை­யில் இரு நாட்­டுப் பிர­த­மர்­களும் இதுகுறித்து பேசி­னர்.

“இந்த அதி­விரைவு ரயில் திட்­டம் குறித்த மேல் விவ­ரங்­க­ளைக் கூடிய விரை­வில் இரு­த­ரப்­பும் கூட்­ட­றிக்­கை­யில் வெளி­யி­டும்,” என்று இரு தலை­வர்­கள் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்கப் பட்டது. இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான வலு­வான உறவு­களை இரு பிர­த­மர்­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர். இந்த உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த அவர்­கள் விருப்­பம் தெரி­வித்­த­னர்,” என்று அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. 350 கிலோ மீட்டர் தூர அதிவிரைவு ரயில் பாதை மூலம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு 90 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!