பாதசாரி மரணம்: சைக்கிளோட்டிக்கு ஒரு வார சிறை

பாதசாரியின் மீது மோதி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த பின்லாந்தைச் சேர்ந்த 42 வயது சைக்கிளோட்டி, டோனி டிமோ சல்மினனுக்கு ஒரு வார சிறை இன்று விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி சிம்ஸ் அவென்யுவில் நடந்த இந்த விபத்தில் மண்டையில் கடுமையாகக் காயமடைந்த 53 வயது திரு சியூ ஃபுக் இயூ, ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

மாலை 6.16 மணிக்கு சிமஸ் அவென்யு ஈஸ்டை நோக்கிச் செல்லும் நான்கு தட சாலையான சிம்ஸ் அவென்யூ ரோட்டின் இடக்கோடி தடத்திலிருந்து திரு சியூ சென்றுகொண்டிருந்தார். திரு சியூ மூன்றாவது தடத்தில் இருந்ததை சல்மினன் கண்டபோதும் தனது சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை. காயமடைந்த திரு சியூ டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சல்மியன் அதே நாளன்று தாமாகவே போலிசாரிடம் சென்று நடந்தவற்றை விளக்கினார்.

சைக்கிளை நிறுத்த முயன்றபோதும் இந்த மோதலைத் தவிர்க்க முடியவில்லை என்று சல்மியனின் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனை ஏற்க மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், திரு சியூ விதிகளை மீறி சாலையைக் கடக்கவில்லை எனக் கூறினார். சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டி திரு சியூவின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததற்காக சல்மியனுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!