வீட்டில் இருக்கும் உத்தரவை மீறி வெளியே சென்றவருக்கு கொவிட்-19

வீட்டில் இருக்கும் உத்தரவை மீறி வெளியே சென்றவருக்கு கொவிட்-19

2 mins read
3c5adcb8-504f-4b4a-a582-eb7a16d3f385
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிக்சல்ஸ் -

வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டும் அதை மீறி வெளியே சென்­ற­னர் இரு­வர். அதில் ஒரு­வ­ருக்­குப் பின்­னர் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யானது.

நீதி­மன்­றத்­தில் நேற்று நூருல் அஃபிகா முகம்­மது, முகம்­மது நூர் சலாம் முகம்­மது யூசோஃப் ஆகிய இரு­வர் மீதும் தொற்­று­நோய்த் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

'பபுல் டீ' பானம் வாங்க சென்­றார்

ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து மார்ச் 21ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் வந்த நூரு­லுக்கு மார்ச் 21 முதல் ஏப்­ரல் 4 வரை­யி­லான வீட்­டில் தங்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.ஆனால் மார்ச் 22ஆம் தேதி­யன்று அரு­கில் இருந்த கடை ஒன்­றுக்கு முகக்­க­வ­சம், கை சுத்­தி­கரிப்­பான் போன்ற பொருட்­களை வாங்­கச் சென்­றார். பின்­னர் 23ஆம் தேதி­யன்று 'பபுல் டீ' வாங்­கு­வ­தற்­காக பேருந்து ஒன்­றில் ஏறி காஸ்வே பாயிண்ட் பேரங்­கா­டிக்­குச் சென்­றார். அதை­ய­டுத்து மேல்­ப­டிப்புக்கு விண்­ணப்­பிக்க தனி­யார் வாடகை வாக­னத்­தில் நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிக்கு சவாரி செய்­தார்.

நண்­ப­ரின் திரு­மண வேலை­களில் உத­வச் சென்­றார்

அதை­ய­டுத்து, ஏப்­ரல் 2, 3 ஆகிய தேதி­களில் மறு­ப­டி­யும் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி தன் நண்­பரின் திரு­மண வேலை­களில் உதவ பொங்­கோல் ஃபீல்டுக்­குச் சென்­றார் நூருல். இரு தின­மும் நண்­ப­ரின் குடும்­பத்­தார் கூடவே இருந்­த­னர். பல­முறை தனது வீவக புளோக் கீழ்த்­த­ளத்­தில் நின்று நூருல் புகைப்­பி­டித்­தார் என்­றும் கூறப்­பட்­டது. இந்­நி­லை­யில் ஏப்­ரல் 12ஆம் தேதி­யன்று உடல்­ந­ல­மில்­லா­மல் போன நூருல், மருத்­து­வ­மனைக்­குச் சென்­றார்.

அப்­போது அவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் நூருல் தாதி­யா­கப் பணி­பு­ரிந்­தார் என்­றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­கள் இரு­வ­ருக்­குக் கிருமி தொற்­றி­யுள்­ளது என்­றும் அறி­யப்­ப­டு­கிறது.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில்பய­ணம் செய்­தார்

வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­தரவை மீறிய மற்­றொ­ரு­வர் மலே­சி­யா­வி­லி­ருந்து மார்ச் 26ஆம் தேதி­யன்று திரும்­பிய சிங்­கப்­பூ­ரர் நூர், 40. வந்த நாள் தொடங்கி ஏப்­ரல் 10ஆம் தேதி வரை உத்­த­ர­வுக்­குக் கட்­டுப்­பட்டு நடக்க வேண்­டிய நிலை­யில் அதை மீறி உட்­லண்சி­லி­ருந்து சுவா சூ காங்­கில் உள்ள தன் தாயா­ரின் வீட்­டுக்கு பொதுப் போக்­கு­வ­ரத்­தில் நூர் பய­ணம் செய்­தார்.

அத்­து­டன் சுவா சூ காங் அக்­கம்­பக்க காவல் நிலை­யம், சுவா சூ காங் வீவக அலு­வ­ல­கம், லிம்­பாங் உண­வங்­காடி, லிம்­பாங் பேரங்­காடி போன்ற இடங்­க­ளுக்­கும் அவர் சென்­றி­ருந்­தார். குற்­றம் சாட்­டப்­பட்ட நூருல், நூர் இரு­வரும் மீண்­டும் அடுத்த மாதம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

லஸா­ரஸ் தீவு ஒன்­று­கூ­ட­லில் பங்­கேற்ற பெண்­ணுக்கு அப­ரா­தம்

இதற்­கி­டையே லஸா­ரஸ் தீவில் நடந்த ஒன்­று­கூ­டல் ஒன்­றில் மேலும் ஒரு­வ­ருக்கு நேற்று தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் நிலை­யில் ஐவ­ருக்கு மேல் ஒன்று­கூ­டக்­கூ­டாது என்ற கட்­டுப்­பாடு இருந்­தும் அதை மீறி 12 பேர் ஒன்­று­கூ­டி­னர். அதில் 31 வயது வியட்­நா­மி­யர் லுவோங் தி து ஹாவும் ஒரு­வர். கட்­டுப்­பா­டு­களை மீறி ஒன்­று­கூ­ட­லில் பங்­கேற்­ற­தற்­காக நிரந்­த­ர­வா­சி­யான அவ­ருக்கு $3,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி­யன்று நடந்த அந்த ஒன்­று­கூ­ட­லில் 12 பேரும் கப்­ப­லில் செயிண்ட் ஜான்ஸ் தீவுக்­குச் சென்று, அங்­கி­ருந்து லஸா­ரஸ் தீவுக்கு நடந்து, பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் அங்கு ஈடு­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

குறிப்புச் சொற்கள்