கொவிட்-19: இறுதிக்கட்ட சோதனையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் எதிர்ப்பு மருந்து

கொவிட்-19: இறுதிக்கட்ட சோதனையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் எதிர்ப்பு மருந்து

1 mins read
e57955a7-7775-465a-8590-6049d0e29616
இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா கிருமி உடலில் பரவுவதை மெதுவடையச் செய்யும் நோயெதிர்ப்பு மருந்து. படம்: டைசன் -

சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மான டைசன் தயா­ரித்­துள்ள கொவிட்-19 கிரு­மிக்­கான எதிர்ப்­பாற்­றல் மருந்­தின் இறுதிக்கட்ட பரி­சோ­தனை நேற்று தொடங்­கி­யது.

கொரோனா கிரு­மித்­தொற்றுள்ள 1,305 நோயா­ளி­கள் இம்­ம­ருந்­தைச் சோதித்­துப் பார்க்க முன்­வந்­துள்­ள­னர்.

இந்தப் பரி­சோ­தனை வெற்­றி­பெற்­றால் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், மற்ற மருந்­துக் கட்­டுப்­பாட்டு அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றி­டம் TY027 எனும் இம்­ம­ருந்து ஆய்­வுக்கு அனுப்­பப்படும். பின்­னர் அந்த மருந்து, கிரு­மித்­தொற்­றுச் சிகிச்­சை­யில் பயன்­ப­டுத்­தப்­படும். அக்­டோ­ப­ரில் இறு­திக்கட்ட சோத­னை­க­ளைத் தொடங்க காதார அறி­வி­யல் ஆணை­யம் டைச­னுக்கு அனு­ம­தி­ய­ளித்­தது.

சோத­னை­களை மேற்­கொள்ள சிங்கப்­பூர் பொது மருத்­து­வ­மனை, தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை ஆகி­யவை டைச­னு­டன் இணைந்­துள்­ளன. சாங்கி பொது மருத்­து­வ­மனை, செங்­காங் பொது மருத்­து­வ­மனை ஆகி­யவை பொருத்­த­மான நோயா­ளி­களை பங்­கேற்க பரிந்து­ரைக்­கக் கூடும்.

ஜூன் மாதம் தொடங்கிய ஆறு வார முதல்கட்ட சோதனையில் 23 பேர் பங்கேற்றனர். அது வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முந்­தைய சோத­னை­க­ளைப் போலன்றி, மூன்­றாம் கட்­ட­மா­னது இஸ்­ரே­லில் உள்ள ஷெபா மருத்­துவ மையம் உள்­ளிட்ட வெளி­நாட்டு நோயா­ளி­க­ளை­யும் உள்­ள­டக்­கும்.

இந்த எதிர்ப்பு மருந்தை உரு­வாக்­கத்­தில் தற்­காப்பு அமைச்சு, சுகா­தார அமைச்சு, பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழகம் ஆகி­யவை பல்­வேறு அமைப்­பு­கள் டைச­னு­டன் இணைந்­துள்­ளன.

குறிப்புச் சொற்கள்