சிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,320

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 13) புதிதாக 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,320 ஆகியுள்ளது.

இந்த 7 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

உள்ளூர் சமூகத்திலோ அல்லது ஊழியர் தங்கும் விடுதியிலோ இன்று யாருக்கும் கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்று சிங்கப்பூரில் 8 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இந்தியா, நேப்பாளம், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்த 5 சிங்கப்பூரர்கள், ஒரு நிரந்தரவாசி ஆகியோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கா, மாலத்தீவு ஆகியவற்றிலிருந்து வந்த சார்ந்திருப்போர் அட்டை வைத்திருக்கும் இருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த 8 பேரும் 19 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!