மடக்க முடியாத மிதிவண்டியை ரயில் கம்பத்தில் தொங்கவிட்ட ஆடவர் மீது போலிசில் புகார்

பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிலான பெரிய மிதிவண்டி ஒன்றை ரயிலுக்குள் கொண்டு சென்றதுடன் அதனைத் தூக்கி கம்பியில் மாட்டிய சம்பவத்தின் தொடர்பில் ஆடவர் மீது எஸ்எம்ஆர்டி நிறுவனம் போலிசில் நேற்று முன்தினம் (டிசம்பர் 15) புகார் அளித்துள்ளது.

ரயிலில் கம்பிகளில் மிதிவண்டி தொங்குவதையும் மற்ற பயணிகள் மீது அந்த மிதிவண்டியின் உரிமையாளர் சாபமிட்டு கத்துவதையும் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இரவு 7.10 மணியளவில் பதிவிட்ட எஸ்எம்ஆர்டி, உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்தில், மடக்க முடியாத மிதிவண்டியுடன் அந்த ஆடவர் ரயிலில் நுழைய முற்பட்டதை தமது ஊழியர் தடுக்க முயற்சி செய்ததாகக் குறிப்பிட்டது.

ஜூரோங் ஈஸ்டில் மற்றொரு ரயிலில் ஏறி பைனியர் ரயில் நிலையத்தில் இரவு 7.50 மணியளவில் வெளியானதாகவும் அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டு அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

இனிமையான, மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத பயணத்துக்கு, விதிமுறைகளைப் பின்பற்றுமாறு எஸ்எம்ஆர்டி பயணிகளைக் கேட்டுக்கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!