சிங்கப்பூரில் சமூக அளவில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாக 80% மக்களுக்குத் தடுப்பூசி தேவை

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாக 80% மக்களுக்குத் தடுப்பூசி தேவை

2 mins read
0e435665-6057-456a-8b32-28af9f8b0a33
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைத் தவிர்த்­துக்கொள்ள தேவை­யான எதிர்ப்பு ஆற்­ற­லைக் கொண்ட சமூ­கத்தை உரு­வாக்க வேண்­டு­மானால் மக்­களில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்பு ஊசி போட வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சின் தலைமை அறி­வி­யல் அறி­ஞர் பேரா­சி­ரி­யர் டான் சோர்ஹ் சுவான் தெரி­வித்து இருக்­கி­றார்.

மக்­கள்­தொ­கை­யில் பெரும்­பாலா­ன­வர்­களிடம் கொவிட்-19 எதிர்ப்பு ஆற்­றல் இருக்­கு­மா­னால் அந்த ஆற்­றல் இல்­லாத மற்­ற­வர்­களைக் கிருமி தொற்­றும் ஆபத்து மறை­மு­க­மாக குறைக்­கப்­பட்­டு­விடும் என்று அவர் புதன்­கி­ழமை விளக்­கி­னார்.

மக்­கள்­தொ­கை­யில் தடுப்பூசி அளவு பொது­வாக ஏறக்­கு­றைய 60% முதல் 70% வரை என்­றா­லும் குறைந்­த­பட்­சம் 80 விழுக்­காட்டு மக்­க­ளுக்குத் தடுப்­பூ­சி­யைப் போடு­வது விவே­க­மா­ன­தாக இருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தடுப்­பூ­சி­யின் ஆற்­றல் 90% இருக்­கும் என்­றும் மக்­கள் தொகை­யில் 80%க்கு அந்த ஊசி போடப்­பட்டு இருக்­கிறது என்­றும் வைத்துக்­ கொண்­டால், மக்­களில் 72 விழுக்­காட்­டி­ன­ரி­டம் நோய்த் தடுப்­பாற்­றல் ஏற்­பட்டு இருக்­கும் என பேரா­சி­ரி­யர் டான் விளக்­கி­னார்.

பொருத்­த­மான ஒவ்­வொ­ரு­வ­ரும் ஊசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார். ஊசி போட்­டுக்­கொண்­டால் அது எல்­லா­ருக்­கும் பாது­காப்­பானது என்று அவர் தெரிவித்தார்.

அமெ­ரிக்­கா­வின் ஃபைசர் நிறு­வ­ன­மும் ஜெர்­ம­னி­யின் பயோ­என்­டெக் நிறு­வ­ன­மும் சேர்ந்து உரு­வாக்கி இருக்­கும் தடுப்­பூசி, இந்த ஆண்டு முடி­வ­தற்­குள் சிங்­கப்­பூருக்கு வரும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் அண்­மை­யில் அறி­வித்து இருந்­தார்.

அதை­ய­டுத்து சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், முதி­யோர்­கள், நோயா­ளி­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும் என்று குறிப்­பிட்ட பிர­த­மர், அடுத்த ஆண்டு மூன்­றா­வது காலாண்டு வாக்­கில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தடுப்­பூசி கிடைக்­கும் என்­றும் உறுதி கூறி­னார்.

மூத்­த­வர்­களில் 60 வயது மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­கள் அடங்­கு­வர் என்று பேரா­சி­ரி­யர் டான் விளக்­கி­னார். இந்த வய­துப் பிரி­வி­னர்­கள் ஏறக்­கு­றைய 1 மில்­லி­யன் பேர் இருக்­கி­றார்­கள்.

முதி­ய­வர்­க­ளுக்­கும் பல சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளைக் கொண்ட முதி­ய­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட்­டால் அந்த வயது பிரி­வி­ன­ரி­டையே தொற்று மிக­வும் குறை­யும் என்று பேரா­சி­ரி­யர் டான் கூறினார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள், முன்­க­ளப் பணி­யாளர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­டால் இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து குறை­யும். இவர்­க­ளுக்கு அப்­பா­லும் மொத்த மக்­கள்­தொ­கை­யில் அதிக விகி­தாச்­சா­ரத்­தில் தடுப்­பூசி போடப்­பட்­டால் பெரிய அள­வில் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வது பெரி­தும் குறைக்­கப்­பட்­டு­வி­டும் என்று பேரா சிரியர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்