தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் ஆகாய தற்காப்புக் கட்டமைப்பில் புதிய தலைமுறை ஏவுகணை

1 mins read
ae71a6de-f4e5-48f2-8a81-157b9e1d875d
படம்: திமத்தி டேவிட் -

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை­யின் அடுத்த தலை­முறை 'அஸ்­டர் 30 ஏவு­கணை' ஆகஸ்ட் முதல் முழு­மூச்­சா­கப் பரி­சோ­திக்­கப்­பட்டு வந்­துள்­ளது.

அது ஆகா­யப் படை­யின் கட்­ட­மைப்­பு­டன் கூடிய தீவு தழு­விய ஆகாய தற்­காப்பு முறை­யு­டன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு இருக்­கிறது. இப்­போது இந்த முறை பல­த­ரப்­பட்ட மிரட்­டல்­க­ளைச் சமா­ளித்­து­வி­டக்கூடிய ஆற்­ற­லு­டன் திகழ்­கிறது.

புதிய ஏவு­கணைப் பயிற்­சியை லிம் சூ காங் முகாம் IIல் பார்வை­யிட்ட தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், இந்­தத் தற்­காப்பு முறை­யின் பாது­காப்பு ஆற்­ற­லில் இன்­றைய நாள் ஒரு குறிப்­பி­டத்­தக்க மைல்­கல் என்று கூறி­னார்.

இந்­தப் புதிய ஏவு­க­ணைச் சாத­னம் தொலை­தூ­ரத்­தில் இருக்­கும் இலக்­கு­க­ளைக் கண்­ட­றிந்து அவற்­றைச் சமா­ளிக்­கக்­கூ­டி­யது.

அதே­வே­ளை­யில், மனித ஆற்­றல் அவ்­வ­ள­வாக இதற்குத் தேவைப்ப­டாது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

குறிப்புச் சொற்கள்