சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காண்டாமிருக வசிப்பிடத்துக்குள் நுழைந்த இளைஞர்; போலிஸ் விசாரணை

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள வேலியிடப்பட்ட காண்டாமிருக வசிப்பிடப் பகுதிக்குள் இளையர் ஒருவர் நேற்று (டிசம்பர் 17) அனுமதி இன்றி சென்றது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்தக் காணொளியில், காண்டாமிருக வசிப்பிடத்துக்குள் செல்லும் ஆடவர் கரணம் அடித்து, பின் அந்த வசிப்பிடத்தின் மறைப்பைத் தாண்டி அங்கிருந்து வெளியேறுவது பதிவாகியுள்ளது.

அந்த இளையரின் டிக்டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளி 33,000க்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில் போலிசில் புகார் அளித்திருப்பதாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பு அமைப்பான Wildlife Reserves Singapore தெரிவித்துள்ளது.

அந்த இளையரின் செயலைக் கண்டித்த அவ்வமைப்பு, “கண்மூடித்தனமான, சமூகப் பொறுப்பில்லாத, மிகவும் ஆபத்தான இந்தச் செயல் வனவிலங்குகளை அவமதிப்பதாக உள்ளது,” என்று தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே உலைவைக்கும் செயல் என்றும் இவ்வாறு செய்யக்கூடாது என்றும் விலங்கியல் தோட்டம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

கடந்த 2008ஆம் ஆண்டில், வெள்ளைப் புலிகளின் வசிப்பிடத்திற்குள் நுழைந்த 32 வயதான, விலங்கியல் தோட்ட ஊழியரை பார்வையாளர்கள் சூழ்ந்திருக்கும்போதே 3 புலிகள் அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!