சிங்கப்பூர் மக்கள்தொகையில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்கு கொரோனா தடுப்பூசி போட முதலில் இலக்கு வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் பி117 எனப்படும் புதிய வகை கொரோனா கிருமித்தொற்று சில நாடுகளில் பரவி வருவதால் மக்கள்தொகையில் குறைந்தது 90 விழுக்காட்டினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹொக் பொதுச் சுகாதாரப் பள்ளி யின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் வந்த 17 வயது சிங்கப்பூர் பெண், புதிய வகை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.