கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரபணு மாறிவிடும் என்று வலம் வரும் பொய்ச் செய்தியை நான்கில் ஒருவர் மட்டுமே நம்புவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகத்தில் வலம் வரும் இந்தப் புரளியை முதியவர்கள் நம்பு வதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ஆய்வு கூறியது.
ஆய்வில் மொத்தம் 999 பேர் பங்கெடுத்தனர். அதில் பங்கெடுத்தவர்களின் சராசரி வயது 40ஆகும். அவர்களில் ஏறத்தாழ 51 விழுக்காட்டினர் ஆண்கள்.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட 55 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

