ஆபத்திலிருந்து சிறுவனைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருதளித்த குடிமைத் தற்காப்புப் படை

ஹவ்காங் ஸ்திரீட் 22ல் உள்ள வீவக புளோக் ஒன்றின் 3வது மாடி விளிம்பில், தொங்கிக்கொண்டு இறங்க முடியாமல் தவித்த 6 வயதுச் சிறுவனைக் காப்பாற்றினர் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள்.

நிலவனப்பு பராமரிப்பாளர்களான தாஸ் டிப்டோ, பிஸ்வாஸ் ஜிபோம் ஆகிய இருவருக்கும் அந்த நற்செயலுக்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் சமூக உயிர்காப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கலோனல் லிம் ஹான் சீ எனும் மூன்றாவது எஸ்சிடிஎஃப் பிரிவு கமாண்டர் இந்த விருதை நேற்று (ஜனவரி 6) அவர்களுக்கு வழங்கினார்.

விரைந்து செயல்பட்ட சமயோசிதச் செயலை எஸ்சிடிஎஃப் தமது ஃபேஸ்புக் பதிவில் பாராட்டியது.

சிறுவன் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்தபோது, அருகில் மரக் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார் தாஸ். சிறுவன் தொங்கிக்கொண்டிருந்த வீட்டின் கதவு பூட்டி இருப்பதால், அந்த வழியாகச் சென்று சிறுவனை மீட்க இயலாததைக் கூறி சிறுவனின் தாயார் அழுததைக் கண்டு, தம் வேலையில் பயன்படுத்தப்படும் ‘பூம் லிஃப்ட்’ இயந்திரத்தைப் பயன்படுத்தி சிறுவனை பத்திரமாக மீட்டனர் இருவரும்.

வெளிநாட்டு ஊழியர் நிலையமும் இவ்விருவருக்கும் விருது வழங்கி சிறப்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!