சிங்கப்பூரிலிருந்து ஆட்களை பாத்தாம் தீவுக்கு அழைத்துச் சென்றவருக்கு சிறை, அபராதம்

கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.

இதனால் இந்தோனீசியாவில் வசிக்கும் தங்களின் குடும்பத்தாரைப் பார்க்க உதவ முடியுமா என்று தன் சகோதரரும் நண்பரும் கேட்டுக்கொண்டதற்கு 36 வயது அர்மான் மாமுட் சம்மதித்தார்.

சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று, தன் நிறுவனத்திற்குச் சொந்தமான கலனில் இருவரையும் செயிண்ட் ஜான்ஸ் தீவு அருகே ஓட்டிச் சென்றார்.

இந்தோனீசியப் படகு ஒன்று வரும்வரை சிங்கப்பூரின் நீரிணையிலேயே அர்மான் காத்திருந்தார். கரையோரப் போலிசாரிடம் சிக்காமல் இருக்க, தன் கலனின் ‘டிரான்ஸ்போண்டர்’ சாதனத்தை அர்மான் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.

எதிர்பார்த்திருந்த படகு வந்ததும் உதவி கோரிய இரு ஆடவர்களும் அதில் குதித்து பாத்தாம் தீவுக்குப் பயணம் செய்தனர். நீரிணையில் அடையாளம் தெரியாத கலன் ஒன்று தென்பட்டதை அடுத்து கரையோர போலிசார் அர்மானைக் கைது செய்தனர்.

குடிநுழைவுச் சட்டம், சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையச் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றம் புரிந்ததற்காக நேற்று அர்மானுக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பணத்துக்காக இச்செயலை செய்யவில்லை என்றும் உதவுவதற்காகவே செய்ததாகவும் அர்மான் நீதிமன்றத்தில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!