சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 11) நண்பகல் நிலவரப்படி மேலும் 22 பேருக்கு கொவிட்-19 தொற்று பதிவாகியுள்ளது. இதையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,929 ஆகியுள்ளது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
உள்ளூர் சமூகத்திலோ, தங்கும் விடுதிகளிலோ இன்று புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகவில்லை.


