மூதாட்டிக்கு தாமாக ஓடிச் சென்று உதவிய வெளிநாட்டு ஊழியர்

பொத்தோங் பாசிரில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் வில்லேஜுக்கு அருகில் உள்ள ஏற்றமான சாலையில் அட்டைகள் நிரம்பிய தள்ளு வண்டியை மூதாட்டி ஒருவர் தள்ள முடியாமல் சிரமத்துடன் தள்ளிச் சென்றுகொண்டிருந்தார்.

அதனைப் பார்த்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சற்றும் தயங்காமல், ஓடிச் சென்று அம்மூதாட்டிக்கு உதவினார்.

மூதாட்டியுடன் சேர்ந்து தள்ளுவண்டியை ஏற்றமான சாலையில் வண்டியைத் தள்ளிச் சென்று உதவினார்.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பொத்தோங் பாசிரில் உள்ள பூங்கா இணைப்புப் பகுதியில் மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்டோம்ப் வாசகர் ‘வான்’ இந்தச் சம்பவத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனதாகக் குறிப்பிட்டார்.

“அந்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயலைப் பாராட்டி, நன்றி தெரிவிப்பதாக,” அந்த வாசகர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!