சளிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கடந்த சில வாரங்களில் மருத்துவ சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சளிக்காய்ச்சல் பருவகாலம் தொடர்புடையது என்பதாலும் கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பலரும் இத்தகைய சிகிச்சைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சின் வாராந்திர தொற்று நோய் செய்தியறிக்கை 2020ன்படி, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பலதுறை மருந்தகங்களில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளில் பாதிக்கும் குறைவானோர் ARI எனப்படும் கடும் மூச்சு தொற்றுப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.

நல்ல தனிநபர் சுகாதரம், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற காரணங்கள் இந்த எண்ணிக்கை குறைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் சிலர் அத்தகைய நடைமுறைகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர்.

கடந்த மாதத்தில் ARIக்கு சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சராசரியாக தினமும் 869 அத்தகைய நோயாளிகள் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சிகிச்சை பெற்றனர். ஆனால் ஜனவரி 17 முதல் 23க்கு இடைப்பட்ட காலத்தில் அத்தகைய நோயாளிகளின் தினசரி சராசரி 1,423 ஆக உயர்ந்தது.

மூக்கடைப்பு, மூக்கில் சளி, தும்மல், தொண்டை வலி, இருமல் போன்றவை ARIன் அறிகுறிகள்.

சில தனியார் மருந்தகங்களில் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டறிந்தபோது, கடந்த சில வாரங்களில் ARIக்கு சிகிச்சை பெற்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!