டிரேஸ்டுகெதர் தரவு பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு ஆதரவளிக்கிறோம்: பிரித்தம் சிங்

மிகக் கடு­மை­யான குற்­றங்­கள் தொடர்­பி­லான புல­னாய்­வுக்கு மட்­டுமே தனிப்­பட்ட தொடர்பு தட­மறி­தல் தர­வு­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்ற பாது­காப்­புக் கட்­டுப்­பா­டு­களை உத்­தேச சட்­டம் கொண்­டி­ருப்­ப­தால் அதற்கு பாட்­டா­ளிக் கட்சி ஆத­ர­வளிக்­கும் என்று அதன் தலை­மைச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான திரு பிரித்­தம் சிங் (படம்) நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) (சட்­டத்­தி­ருத்­தம்) மசோதா மீதான விவா­தத்தை நேற்று தொடங்கி வைத்து பேசிய திரு சிங், “குற்­ற­வி­யல் நடை­முறை விதித் தொகுப்­பின்படி குற்றவியல் புலனாய்வுக்கு எவ்வித தரவுகளையும் கோரலாம் என்ற அதிகாரத்தை இந்தப் புதிய திருத்தச் சட்டம் குறிப் பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.

“மொத்­தத்­தில் சிங்­கப்­பூ­ர­ரின் அந்­த­ரங்­கத்­தைப் பாது­காக்­கும் உரி­மையை இந்­தப் புதிய சட்­டம் மேம்­பட்ட முறை­யில் பாது­காக்­கிறது,” என்­றார்.

தற்­போது நாட்­டின் முன்­னு­ரி­மை­யாக இருப்­பது கொவிட்-19 கொள்ளை­நோ­யைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வது மற்­றும் பொரு­ளி­யலை மீட்­சி­ய­டையச் செய்­வது என்று குறிப்­பிட்ட திரு சிங், கொள்ளை­நோய் தொற்­றி­ய­வர்­களின் தொடர்பு தட­ம­றி­த­லுக்­குத்­தான் டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் பயன்­பட வேண்­டுமே தவிர, குற்­ற­வி­யல் புல­னாய்­வுக்கு அது ஏன் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அதற்கு­தான் போலிஸ் படை­யி­டம் கண்­கா­ணிப்பு கேம­ரா பதி­வு­கள், கைபே­சி­க­ளை­யும் மடிக்­க­ணி­னி­களை­யும் சோத­னை­யி­டு­தல், குற்­றம் நடந்த இடத்­தில் தட­ய­வி­யல் சோத­னை­களை நடத்­து­தல் போன்ற மற்ற வழி­கள் உள்­ள­னவே என்று கேள்வி எழுப்­பி­னார்.

கொவிட்-19 தொடர்பு தட­ம­றி­த­லுக்­குத்­தான் தர­வு­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று முன்­ன­தாக அறி­வித்த அர­சாங்­கம் கடந்த மாதம் அது குற்­ற­வி­யல் புல­னாய்­வுக்­கும் பயன்­ப­டுத்­தப்­படும் என்று கூறி­ய­தைத் தொடர்ந்து மக்­க­ளி­டையே அதி­ருப்தி, குறை­கூ­றல், கவலை போன்­றவை தலை­யெ­டுத்­தன என்று அவர் விளக்­கி­னார்.

தொடர்பு தட­ம­றி­லுக்கு டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் முக்­கி­ய­மா­னது என்­றா­லும் கடு­மை­யான ஏழு குற்­றங்­க­ளின் புல­னாய்­வுக்கு அந்­தத் தர­வு­க­ளின் பயன்­பா­டும் முக்­கி­யம் என்று அர­சாங்­கம் கூறு­வ­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை என்­றும் அவர் சொன்­னார்.

ஆனால், டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் தொடர்­பில் அர­சாங்­கத்­தின் மீதான நம்­பிக்­கை­யும் மக்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் சற்று குறைந்­தி­ருப்­ப­தால், அதை மீண்­டும் பெற திரு சிங் சில யோச­னை­களை முன்­வைத்­தார்.

“மக்­க­ளின் தனிப்­பட்ட தர­வு­கள் எப்­படி மிகக் முக்­கி­ய­மான காரி­யங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன, அதன் நம்­ப­கத்­தன்மை என்ன, தரவுப் பாது­காப்பு எவ்­வாறு உறுதி செய்­யப்­ப­டு­கிறது என்­பதை மக்­க­ளுக்கு ஒளி­வு­ம­றை­வின்றித் தெரி­விக்க வேண்­டும்.

“தர­வு­க­ளைப் பெறு­வ­தி­லும் பயன்­ப­டுத்­து­வ­தி­லும் முறை­கே­டு­கள் நடை­பெ­றா­மல் இருப்­பதை உறுதி செய்ய அவற்­றைக் கண்­கா­ணிக்­கும் ஒரு சுயேச்­சை­யான அதி­காரி ஒரு­வரை அர­சாங்­கம் நிய­மிக்க வேண்­டும்,” என்றும் திரு பிரித்தம் சிங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!