தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் நிலவரம் தொடர்பில் 'ஆழ்ந்த அக்கறை' கொண்டுள்ள சிங்கப்பூர், இந்தோனீசியா

2 mins read
a99f0a37-7b3e-4157-8c73-a4b954b267e1
சிங்­கப்­பூ­ருக்கு வருகை மேற்­கொண்­டி­ருக்­கும் இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரட்னோ மர்­சு­டி­யும் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் நேற்­றுச் சந்­தித்து மியன்­மார் நில­வ­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். படம்: வெளியுறவு அமைச்சு -

மியன்­மார் நில­வ­ரம் குறித்து தாங்­கள் ஆழ்ந்த அக்­கறை கொண்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்ளசிங்கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் மியன்­மார் நில­வ­ரம் குறித்து விவா­திக்க முறை­சாரா ஆசி­யான் அமைச்­சர்­நிலை கூட்­டம் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான பரிந்­து­ரைக்கு தங்­கள் ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளன என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ருக்கு வருகை மேற்­கொண்­டி­ருக்­கும் இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரட்னோ மர்­சு­டி­யும் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் நேற்­றுச் சந்­தித்து மியன்­மார் நில­வ­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"மியன்­மார் நிவ­ல­ரம் தங்­க­ளுக்­குக் கவ­லை­ய­ளிப்­ப­தா­க­வும் அந்த­நாட்­டி­லுள்ள எல்­லாத் தரப்­பி­ன­ரும் கலந்து பேசி, அனை­வ­ருக்­கும் உகந்த அமை­தி­யான தீர்­மா­னத்­துக்கு முயற்சி எடுக்க வேண்­டும் என்றும் அமைச்­சர்கள் தெரி­வித்­த­னர்," என்று அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

"நாட்­டில் அமைதி திரும்ப உட­னடி முயற்சி எடுக்­கப்­பட வேண்­டும். எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் அப்­பாவி மக்­க­ளி­டம் வன்­மு­றை­யுடன் நடந்­து­கொள்­வ­தை­யும் அவர்­கள் மீது உண்­மை­யான தோட்­டாக்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தை­யும் தவிர்க்க வேண்­டும்," என்று டாக்­டர் விவி­யன் கேட்­டுக்­கொண்­டார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை டாக்­டர் விவி­யன் நாடா­ளு­மன்­றத்­தில் மியன்­மார் விவ­கா­ரத்தில் சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாடு குறித்து பேசி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தம்மை வர­வேற்ற டாக்­டர் விவி­ய­னுக்கு தமது டுவிட்­டர் மூலம் நன்றி கூறிய திரு­வாட்டி ரட்னோ, "அமைச்­சர் விவி­ய­னும் நானும் ஆசி­யான் தலை­வர் கூட்­டத்­துக்­கான ஆயத்­தப் பணி­கள் பற்­றி­யும் மியன்­மார் உட்­பட இதர ஆசி­யான் விவ­கா­ரங்­கள் பற்­றி­யும் பேசி­னோம்," என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நேற்­றைய கூட்­டத்­தில் இரு வெளி­யு­றவு அமைச்­சர்­களும் தங்­கள் நாடு­க­ளுக்­கி­டையிலான அற்­பு­த­மான இரு­த­ரப்பு உறவை மறு­வு­று­திப்­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.

கொவிட்-19 விளை­வித்­துள்ள சவால்­கள் உட்­பட மேலும் பல திட்­டங்­களில் கூடு­தல் ஒத்­து­ழைப்­பைத் தொடர அவர்­கள் கடப்­பாடு தெரி­வித்­த­னர். நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூ­ருக்கு வந்த திரு­வாட்டி ரட்னோ, நேற்று நாடு திரும்­பி­னார்.

குறிப்புச் சொற்கள்