சிங்கப்பூரில் புதிதாக 12 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 27) அறிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
வெளிநாட்டு ஊழியருக்கான தங்கும் விடுதியைச் சேர்ந்த ஊழியர் எவரும் பாதிக்கப்படவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை 59,925 பேருக்கு கிருமி தொற்றியுள்ள நிலையில், 59,788 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒருவர் உட்பட 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக பராமரிப்பு நிலையங்களில் 66 பேர் தேறி வருகின்றனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர். கிருமித்தொற்று ஏற்பட்டிருந்த காலத்தில் வேறு காரணங்களால் 15 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் கொரோனா தொற்றால் 113 மில்லியன் பேர் பாதிப்புக்குள்ளாகினர், 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகினர்.