உள்துறைக் குழு பணியாளர்கள் 26,200 பேருக்குத் தடுப்பூசி

உள்துறைக் குழு முன்களப் பணியாளர்கள் ஏறக்குறைய 26,200 பேருக்கு வெள்ளிக்கிழமை கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

அவர்களில் 19,058 அதிகாரிகள் இரண்டாவது ஊசியைப் போட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது.

உள்துறை அமைச்சின் தடுப்பூசித் திட்டம் ஜனவரி 11ல் தொடங்கியது. முதலாவதாக முன்களச் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் 80 அதிகாரிகளுக்கு ஊசி போடப்பட்டது.

தொடர்ந்து அமலாக்கம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பணியில் ஈடுபட்டு இருக்கும் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அமைச்சின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

போலிஸ் ஆணையாளர் ஹூங் வீ டெக் பிப்ரவரி 17ஆம் தேதி உள்துறைக் குழு பயிலகத்தில் தன்னுடைய இரண்டாவது ஊசியைப் போட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!