போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மூன்று கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெராயினைக் கைப்பற்றினர்.
சிங்கப்பூரர்களான இரண்டு மாதர்களும் ஓர் ஆடவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய $480,000.
அதிகாரிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பல இடங்களில் நடத்திய சோதனைகளில் $47,879 பணமும் பிடிபட்டது.
கைதான மூவரும் விசாரிக்கப்படுகிறார்கள்.