அதிகமான சிங்கப்பூர் பெண்கள் வெளிநாட்டு ஆடவரை மணம் புரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019ஆம் ஆண்டில் 1,727 பெண்கள் அவ்வாறு செய்தனர். இது 2000ஆம் ஆண்டைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகம். அப்போது 989 பெண்கள் மட்டுமே வெளிநாட்டு வாழ்க்கைத்துணையைப் பெற்றனர். ஆண்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த சிங்கப்பூரர்கள் கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாட்டவரை மணந்தது 75% கூடியதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு 4,426 சிங்கப்பூர் ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்தனர்.
இந்த எண்ணிக்கை 2000ஆம் ஆண்டு 3,834 ஆக இருந்தது. சிங்கப்பூர் அல்லாதோரும் நிரந்தரவாசி அல்லாதோரும் வெளிநாட்டவர் என்று தரவு குறிப்பிட்டிருந்தது. மேலும் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் பெண்கள் வெளிநாட்டு ஆடவரை மணந்த விகிதம் ஒட்டுமொத்த குடிமக்கள்-வெளிநாட்டவர் திருமண எண்ணிக்கையில் 28%. 2000ஆம் ஆண்டில் இது 21% இருந்தது.
மேலும் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரரை மணந்தவர்களில் 60% ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்த ஆண்டில் அதிகமான சிங்கப்பூர் பெண்கள் வேலைக்காகவும் படிப்புக்காகவும் வெளிநாடு சென்றதும் அதே காரணங்களுக்காக வெளிநாட்டு ஆடவர்கள் அதிகமாக சிங்கப்பூர் வந்ததும் ஒருவரோடு ஒருவர் சந்திக்கும் வாய்ப்புகளை அதிகமாக்கியதாக சமூகவியல் நிபுணர் டான் எர்ன் செர் தெரிவித்துள்ளார்.

