கத்தியால் முதலாளியை 94 முறை குத்திய பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

கத்தியால் முதலாளியை 94 முறை குத்திய பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

2 mins read
1a58d701-46b4-4b67-a19f-6014ddac333c
டர்­யாத்தி என்ற அந்த பணிப்­பெண், 2016ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி­ 59 வயது திரு­வாட்டி சியாவ் கிம் சூவை அவ­ரது தெலுக் குராவ் வீட்­டில் கத்­தி­யால் குத்­தி­னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தலை, கழுத்து ஆகிய பகு­தி­களில் முத­லா­ளியை மொத்­தம் 94 முறை கத்­தி­யால் குத்­திய இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்­ணுக்கு நேற்று ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கிட்­டத்­தட்ட ஐந்­தாண்­டுக்கு முன்­னர் நடந்த இச்­சம்­ப­வத்­தில் 28 வயது டர்­யாத்தி என்ற அந்த பணிப்­பெண், 59 வயது திரு­வாட்டி சியாவ் கிம் சூவை அவ­ரது தெலுக் குராவ் வீட்­டில் கத்­தி­யால் குத்­தி­னார்.

முன்­ன­தாக தனக்கு இருந்த மன­ந­லப் பிரச்­சி­னை­யால் கொலை செய்­த­தாக டர்­யாத்­தி­யின் தற்­காப்பு வாதத்தை உயர் நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

அதை­ய­டுத்து, இரண்­டா­வது முறை­யாக விசா­ரணை நடை­பெற்று டர்­யாத்தி குற்­ற­வாளி என்று தற்­பொ­ழுது தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 2016ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி­யன்று திரு­வாட்டி சியாவ் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­டார்.

கொலை செய்ய வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் வேண்­டு­மென்றே தாக்­கிய குற்­றச்­சாட்டை முன்­ன­தாக டர்­யாத்தி எதிர்­நோக்­கி­னார். அக்­குற்­றத்­திற்கு கட்­டாய மரண தண்­டனை விதிக்­கப்­படும்.

இருப்­பி­னும், 2019ஆம் ஆண்டு ஏப்­ரல் 23க்கும் சென்ற ஆண்டு மார்ச் 4க்கும் இடைப்­பட்ட காலத்­தில் டர்­யாத்­தி­யின் வழக்கு விசா­ரணை நடை­பெற்­ற­போது, குற்­றச்­சாட்­டைத் தண்­ட­னைச் சட்­டப்­பி­ரிவு 300 (c) கீழான கொலை என்று அர­சுத்­த­ரப்பு குறைத்­துக்­கொண்­டது. அதற்கு மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை விதிக்­கப்­படும். ஆனால், தாங்­கள் மரண தண்­டனை கோரப் போவ­தில்லை என்று அர­சுத்­த­ரப்பு கூறி­விட்­டது.

டர்­யாத்தி குற்­ற­வாளி என்று தீர்ப்­பா­னதை அடுத்து, டர்­யாத்தி தன் மனதை மாற்­றிக்­கொண்­டார். மன­ந­லம் தொடர்­பில் தான் கொலை செய்ய நேர்ந்­த­தாக தற்­காப்பு வாதம் முன்­வைக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, தீர்ப்பு தள்­ளி­வைக்­கப்­பட்டு வழக்கு விசா­ரணை தொடர்ந்­தது.

விடாது மனச்­சோர்­வுக் கோளா­றுக்கு ஆளான டர்­யாத்தி, திரு­வாட்டி சியா­வைக் கொன்­ற­தாக டாக்­டர் டோமி டான் நிபு­ணத்­துவ சாட்­சி­யம் அளித்­தார். இருப்­பி­னும், டாக்­டர் சானின் ஆதா­ரம் விசா­ர­ணைக்­குப் போது­மா­ன­தாக இல்லை என்­றும் சம்­ப­வத்­தின்­போது செய­லாற்­றும் ஆற்­றலை டர்­யாத்தி இழந்­த­தாக தெரி­ய­வில்லை என்­றும் நீதி­பதி குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி சியாவ் மீது தாக்­கு­தல் நடத்த, வீட்­டின் வெவ்­வேறு பகு­தி­களில் டர்­யாத்தி ஆயு­தங்­களை மறைத்து வைத்­ததை அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

2016ஆம் ஆண்டு ஏப்­ரல் 13ஆம் தேதி­யன்று டர்­யாத்தி தனது பணிப்­பெண் வேலை­யைத் தொடங்­கி­ய­தா­க­வும் நன்கு நடத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

இருப்­பி­னும், ஹாங்­காங்­கில் இல்­லப் பணி­யா­ள­ராக வேலை பார்த்த தன் காத­லரை எண்ணி ஏங்­கி­ய­தா­க­வும் தனது கடப்­பி­த­ழோடு திரு­வாட்டி சியா­வி­ட­மி­ருந்து பணம் திருடி இந்­தோ­னீ­சி­யா­வுக்­குத் திரும்பி சொந்த வியா­பா­ரம் தொடங்­கத் திட்­ட­மிட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

குறிப்புச் சொற்கள்