சிங்கப்பூர் கடப்பிதழ் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும்

சிங்கப்பூர் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) இப்போது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகிறது. இந்தக் காலம் 10 ஆண்டுகளாக ஆக்கப்படுகிறது.

இவ்வாண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு விண்ணப்பிக்கும் 16 வயதுக்கு அதிக வயதுள்ள குடிமக்கள் அனைவருக்கும் 10 ஆண்டு கடப்பிதழ் வழங்கப்படும். கட்டணம் மாறாமல் $70 ஆகவே இருக்கும்.

இதன் மூலம் கடப்பிதழை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சிங்கப்பூரர்களுக்கு வசதி கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

16 வயதுக்கு குறைந்த குடிமக்களுக்கான கடப்பிதழ்தொடர்ந்து ஐந்தாண்டுகள் தான் செல்லுபடியாகும். சிறார்கள் வளர வளர அவர்களின் முக அம்சங்களும் தொடர்ந்து மாறுபாடும் என்பதே இதற்கான காரணம்.

சிங்கப்பூர் கடப்பிதழ் 2005 ஏப்ரல் வரை 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியதாக இருந்து வந்தது. ஆனால் மின்னணுச் சில்லுப் பதிக்கப்பட்ட கடப்பிதழ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கடப்பிதழின் காலம் ஐந்தாண்டாகக் குறைக்கப்பட்டது.

இந்த நவீன முறைக்கு மாறி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. உலகம் முழுவதுமே குடிநுழைவு துறைகள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தையே பரவலாகப் பயன்படுத்துகின்றன என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.

ஆகையால் கடப்பிதழ் செல்லுபடியாகக் கூடிய காலம் 10 ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!